புண்ணிய பூமி பெற்ற
புண்படாத விடுதலைக்குக்
கண்ணியமாய்ப் பொன்விழாக் காண
கற்பகத்தின் மக்கள் விழைந்தார்
எண்ணிலா நற்குணங்கள் பெற்ற
ஏந்தல்கள் ஏற்றமிகு அறிஞர்கள்
நண்ணி விழா எடுத்தார்
நன்மையும் உண்மையும் நாளும் மலர்ந்திட
அன்பும் நட்பும் கைகோர்த்து
பண்புடன் பொலிந்த பேச்சில்
என்பையும் உருக்கும் கதை சொன்னார்
என்னுடைய குருதேவர்
கடல் என்றும் முத்து என்றும்
கனித் தமிழில் விளக்க
உடல் இரண்டு உயிர் ஒன்றுமாய்
உவகை பொங்கி வழிந்தது.
பத்தொன்று ஆண்டுகள் கடந்தும்
பத்தினித் தெய்வம் நினைவிற்கொண்டு
முத்துக் குளிப்பதை முத்தமிழில் நெகிழ
முகிழ்த்தது முத்து; கடலில் அல்ல கண்களில்
அன்புச் சகோதரி,
உங்கள் கட்டுரை என்னை மெய்சிலிர்க்க வைத்தது
நன்றி, வணக்கம்
நலம் பெருகுக
அன்புடன்
ப. லெட்சுமணன்
|